Posts

Showing posts from January, 2019

ANBU THOZHIKU

Image
என் முதல் தோழியே  உன் முதலும் இறுதியுமான தோழன் பேசுகிறேன்  எல்லாவற்றையும் கொண்டுபோனாய் - ஏன்  உன் நினைவுகளை மட்டும்  விதைத்துவிட்டுப்போனாய்  பூத்துக்குலுங்குகிறது ஆழமாய்  வடுவாய் என்னிடம்  என் அம்மை,அப்பன் கையில் மெழுகாய் தவழ்ந்தாய் எரிந்தது நீ! உருகியது நான்! எங்கே!  உனது சிரிப்பும் அழுகையும்  எங்கே! உனது கேலியும் கிண்டலும்  எங்கே! உனது புரணியும் புன்முறுவலும் விசயம் சொன்னார்கள் விரைந்து வந்தோம்  ஒப்பாரி சத்தம் ஆலமரத்தடியில் - கண்ணில்  நீர்த்ததும்பி வடிந்தது கையில்  வெள்ளை வண்டியில் வெள்ளை துணி  போட்டு உன்னை இறக்க  ஓ!! என்ற சத்தம் - எனது  கண் கண்டதில்லை என்னிடம் இவ்வளவு  கண்ணீர் வருமென்று  சேலை சிநேகிதியே !! இது சுடுகாடு அல்ல - உன்னை  தெய்வமாய் வைப்பதற்கான ஏற்பாடு  நெருப்பிற்கு விளையாட்டு காட்டியவளே! - மீண்டும்  பிறப்பாய் வருவாய் மகளாய் என்னிடம் நீ!!    - நான் தேசிகன் 

KADHALIN KAVIDHAI

Image
காதலின் கவிதை :                                               

PULAVAR KULANDHAI PADAIPUGAL - 9

Image
புலவர் குழந்தை படைப்புகள் - 9 இக்கட்டுரையில்   ( " " )இந்த குறியீட்டுக்குள் உள்ள எழுத்துக்கள் புலவர் குழந்தை அவர்களின் எழுத்துக்கள் ஆகும், அதனை அப்படியே தந்துள்ளேன் . கட்டுரை - 12:               நமது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட மனிதர்களை மனதில் நினைத்தால் அவர்களின் உருவமும், அவர்களின் ஆடையும், முகபாவனையும் மனதில் சட்டென்று வந்து நிற்கும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் புலவர் குழந்தை அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.              காவி உடையும், காவி உருமாலையும் போட்டுக்கொண்டிருக்கும் மனிதர், " ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைவன் திருப்பணி " என்ற கொள்கையை உலகெங்கும் பரப்பியவர், நரேந்திர நாதன் என்பது இவரது இயற்பெயர், பகவான் ராமகிருஷ்ணரின் முதல் மாணாக்கர்  ஆவார். அவர்தான் சாமி விவேகானந்தர் .                                                       சாமி விவேகானந்தர்  விவேகானந்தர் அவர்கள் 11.9.1893 ல்  அமெரிக்காவில் உள்ள சிகாகோ எனும் நகரில் உலகில் உள்ள புகழ் பெற்ற சமய தலைவர்கள் கலந்துகொண்ட உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற

PULAVAR KULANDHAI

Image
      புலவர் குழந்தையின் படைப்புகள் - 9 வணக்கம்,  சில நாட்களுக்கு முன்பு நூலகத்திற்கு  சென்றிருந்தேன். அடுக்கிலிருந்த  நூல்களை தடவிக்கொண்டே போகும்போது, புலவர் குழந்தை படைப்புகள் - 9 என்ற நூல் தென்பட்டது. அந்த நூல் புலவர் குழந்தை அவர்களின் கட்டுரைகளை தொகுத்த நூலாகும். புலவர் அவர்கள் செய்யுள், உரைநடை, இலக்கணம், உரைநூல்கள் ஆக மொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். புலவர் அவர்கள் தனி ஒருவராக திருக்குறளுக்கு உரை எழுதி திருக்குறள் குழந்தையுரை என்று வெளியிட்டார். அவுரையை 28 நாட்களில் எழுதி முடித்தார் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.         இவர் எழுதிய நூல்களில் குறிப்பிட்ட ஒரு நூல் அரசால் தடைசெய்யப்பட்டது. அந்த காவிய நூல் ஆதிக்க சாதியினரை கதிகலங்கச் செய்தது. பல விவாதங்களும், சொற்பொழிவுகளும், மாநாடுகளும் இந்த நூலை அடிப்படையாகக்கொண்டு நடைபெற்றது. அந்த நூல்தான் இராவண காவியம் என்பதாகும்.  பின்பு 1971ல்  அன்று முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அவர்களால் தடை நீக்கம் செய்யப்பட்டது. மேலும் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.   ப